"திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை"
சென்னை:
திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட சென்னை எஸ்.பி. சைலேந்திர பாபுகூறியுள்ளார்.
இது குறித்து சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:
தியேட்டரில் இருந்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக கேமரா மூலம் படம்பிடித்து, அதை விசிடியாக தயாரித்துவெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவெற்றியூரில் உள்ள ஒரு தியேட்டரில் சமீபத்தில் வெளியான "தயா" திரைப்படத்தை திருட்டுத்தனமாக கேமராமூலம் படம் பிடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது வரை வீடியோ கடைகள், பர்மாபஜார் போன்ற இடங்களில் சோதனை செய்து 20,000 திருட்டு விசிடிக்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்று சைலேந்திரபாபு கூறினார்.












Click it and Unblock the Notifications