தேர்தலை புறக்கணிக்கக் கோரும் இளங்கோவனை நீக்க காங். உறுப்பினர் கோரிக்கை
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தலைவர்இளங்கோவன் கூறியதை எதிர்த்து அக்கட்சி உறுப்பினர் ஒருவரே போர்க் கொடி எழுப்பியுள்ளார்.
காங்கிரசில் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும் கோஷ்டிப் பூசல் தற்போது மீண்டும் தலையெடுத்துள்ளது.
ஆண்டிப்பட்டி தேர்தலை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் யாரும்வாக்களிக்கக் கூடாது என்றும் அக்கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியிருந்தார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சிஉறுப்பினரான கே. பார்த்தசாரதி என்பவர் கூறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனநாயத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர்பதவியிலிருந்து சோனியா காந்தி உடனடியாக நீக்க வேண்டும்.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறியுள்ளஇளங்கோவன் மீது தேர்தல் கமிஷனும் மாநிலப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில்பார்த்தசாரதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications