ஜெ.க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட காங். பிரமுகர் நீக்கம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளயிட்ட காங்கிரஸ் கட்சியின்மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர் பார்த்தசாரதி. இவர் ஆண்டிப்பட்டியில்போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 2 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார்.
ஆண்டிப்பட்டியில் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறிய இளங்கோவனை தமிழக காங்கிரஸ்தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் பார்த்தசாரதி அறிக்கையில் கூறியிருந்தார்.
இதையடுத்து, அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவரை, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்இளங்கோவன்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அலுவலக பொறுப்பாளர் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பார்த்தசாரதிகட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காங்கிரஸ் உதவ வேண்டும்என்று கூறியுள்ளார்.
நாச்சியப்பனின் இந்த பேச்சு அதிமுக தரப்பில் பரபரப்பையும், காங்கிரஸ் தரப்பில் வெறுப்பையும்ஏற்படுத்தியுள்ளது. இவர் மீதும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் ராஜன்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications