விருதுநகர் மாவட்டத்தில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் இன்று (செவ்வாய்க்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில்முழு அடைப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள்ஈடுபடுத்தப்படுவதாக சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளதை கண்டித்து, பட்டாசு மற்றும் தீப்பெட்டித்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று விருதுநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த பந்த் 24 மணி நேரம் நடைபெறும் என்று பட்டாசு தயாரிப்பாளர்கள்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், பொதுமக்கள்ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

அபாண்டமாக குற்றம் சாட்டும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போரட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பந்த் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. கார்கள்,ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தன.

வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் முக்கியத் தொழில் நகரங்களான சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்ஆகிய ஊர்களில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தில் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டுமே ஓடின.

இதற்கிடையே சிவகாசியில் ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர்கள் திரண்டு நின்று பேரணி நடத்தமுயன்றனர். ஆனால் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால், கோஷங்களை மட்டும்எழுப்பிவிட்டு அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+