ஓய்ந்தது பிரச்சாரம்: ஆண்டிப்பட்டியில் வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் அங்கு போட்டியிடும் அரசியல்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டன.

அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமானஜெயலலிதாவுக்குத் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இருப்பதால், ஆண்டிப்பட்டி தொகுதி நட்சத்திரஅந்தஸ்தைப் பெற்றுள்ளது.

கடந்த 6 நாட்களாக ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் சூறாவளிப் பயணம் செய்துபிரச்சாரம் செய்த ஜெயலலிதா, நேற்றுடன் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் சென்னைதிரும்பினார்.

ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கருணாநிதிகடந்த 16ம் தேதி ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் திமுக இளைஞரணித் தலைவரும் சென்னை மாநகர மேயருமான மு.க. ஸ்டாலின் உள்பட பல திமுகதலைவர்கள் கடைசி நேரம் வரை அனல் பறக்கப் பிரச்சாரம் செய்தனர்.

இதேபோல் மதிமுக வேட்பாளரான ஜெயச்சந்திரன் சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மத்தியஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்பட பல தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் 4வது முக்கியக் கட்சியான புதிய தமிழகம் சார்பாக அக்கட்சித்தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியே களத்தில் நின்று, தலித் ஓட்டுக்கள் முழுவதையும் தட்டிச் செல்வதற்காகமாய்ந்து மாய்ந்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து கடந்தஒரு மாதத்திற்கும் மேலாக பல தலைவர்களைச் சந்தித்த இத்தொகுதி அமைதியாக உள்ளது.

இந்த நேரத்திலிருந்து தேர்தல் நடைபெறும் நாளை மறுநாள் மாலை 5.30 மணி வரை இத்தொகுதியில் யாராவதுபிரச்சாரம் செய்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று தேர்தல்கமிஷன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு தீவிரம்:

இதற்கிடையே தேர்தலின்போது வன்முறையைத் தூண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அதிமுகவினரும்திமுகவினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டே உள்ளனர்.

இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்1,000க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீசாரும் அடங்குவர்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 தமிழகப் போலீசாரும் 2 மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள்.

மேலும் 17 அதிரடிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் அக்குழுக்களைச்சேர்ந்த போலீசார் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.

கலவரம் நடந்தால் அதைச் சமாளிப்பதற்காக ஏராளமான அவசரப் படைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 50 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகள் பதற்றம் நிலவும் பகுதிகளாகக்கருதப்படுகின்றன. இதனால் இந்தச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+