அயோத்தி பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது: காஞ்சி சுவாமிகள்
திக்ஹோரி:
அயோத்தி பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்று காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஜெயேந்திர சுவாமிகள்கூறினார்.
திக்ஹோரியில் துவாரகா பீடாதிபதியான ஸ்வரூபான்ந்த் சுவாமிகளுடன் பக்தர்களிடையே உரையாற்றியஜெயேந்திர சுவாமிகள் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டுவதற்குப் பெரும்பாலான முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைவரின் முழுஒப்புதலுடன் சட்டப்படி அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோவிலைக் கட்ட வேண்டும்.
ராமர் கோவில் பிரச்சனையை எக்காரணத்தைக் கொண்டும் அரசியலாக்கக் கூடாது. இந்தப் பிரச்சனைக்குபேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முடியும்.
நாட்டின் தர்மத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
நம் நாட்டு ஜனநாயகத்துக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அன்பு மற்றும் சேவை குறித்த கல்வியைமதங்கள் போதிக்கின்றன. நம் பண்பாடு, நாகரிகத்திலிருந்து சகிப்புத் தன்மையைத் தனியாகப் பிரிக்க முடியாதுஎன்றார் ஜெயேந்திர சுவாமிகள்.












Click it and Unblock the Notifications