காஷ்மீரில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சரண்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் போலீசிடம் சரணடைந்தனர்.
ஜமாத்-உல்-முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த கமான்டர் அப்துல் ரஷீத் கிலா, தாலிப், உஸ்மான், விகாஸ், காஜிமி,ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த கைட் இக்பால், நயீம், காசிம் மற்றும் தக்ரீக்-உல்-முஜாஹிதீன்இயக்கத்தை சேர்ந்த ஷாஹஸ்வார் ஆகிய 9 தீவிரவாதிகளும் நேற்று சரணடைந்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள கூப்வாரா மாவட்டத்தில் காஷ்மீர் ஐ.ஜி. கே.ரஜீந்திர குமார் முன்னிலையில் சரணடைந்தஇந்த 9 தீவிரவாதிகள், தாங்கள் வைத்திருந்த 8 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும்வெடிப்பொருட்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தீவிரவாதத்தை விட்டுவிட்டு திருந்தி வாழ விரும்புவதாகவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications