புலிகளின் படகுகளை கண்காணிக்கும் கடற்படை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் விடுதலைப்புலிகளின் படகுகளைத் தொடர்ந்து கண்காணிக்க இலங்கைகடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பனே.
மேலும் விடுதலைப்புலிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வந்த பொருளாதாரத் தடைகளையும் இலங்கை அரசுநீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த நார்வே தூதுக்குழு முயன்றுவருகிறது.
இந்நிலையில் போர்நிறுத்தம் நீடித்த போதிலும் விடுதலைப்புலிகளின் படகுகளைத் தொடர்ந்து கண்காணக்ககடற்படைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் 4 கப்பல்களில் புலிகளுக்காக ஆயுதங்கள் வந்ததாகக்கூறப்பட்டதையடுத்தே இந்தத் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாரப்பனே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications