தமிழக அரசு லாட்டரியில் பரிசு பெற்ற 199 பேருக்கு ரூ.20 கோடி விநியோகம்
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு லாட்டரிச் சீட்டுகளுக்கு விழுந்த பரிசுத் தொகையைக் கொடுப்பதற்காக மாநில அரசு ரூ.20கோடியை விடுவித்துள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 199 பேருக்கு தமிழக அரசின் லாட்டச் சீட்டில் பரிசு விழுந்துள்ளது.இந்தப் பரிசுகளின் மொத்த எண்ணிக்கை ரூ.20 கோடி ஆகும்.
ஆனால் தமிழக அரசில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தங்களுக்கு விழுந்த பரிசுத் தொகையைப் பெறமுடியாமல் இவர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பணத்தை தற்போது மாநில அரசு விநியோகித்துள்ளது.
இதன்படி கோவையில் 17 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், சேலம் மற்றும்வேலூரில் தலா 3 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், புதுக்கோட்டைஆகிய ஊர்களைச் சேர்ந்த சிலருக்கும் லாட்டரிப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications