தவறி விழுந்து 3 மாத குழந்தை இறந்த அதிர்ச்சியில் தாய் சாவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வீட்டு மாடிக்கு தூக்கிச் சென்றபோது தாயிடம் இருந்து தவறி விழுந்த 3 மாத கைக்குழந்தை பரிதாபமாக இறந்ததைக்கேட்ட அதிர்ச்சியில் அவரும் இறந்தார்.

மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 3 மாதங்களுக்குமுன்பு தான் சந்தோஷ்குமார் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகும் திலகவதி அவரது அம்மாவீட்டிலேயே இருந்தார்.

சம்பவ தினத்தன்று பகலில் திலகவதி தனது குழந்தையை மாடிக்கு தூக்கிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாகஅவரது கால்கள் இடறியது. இதனால் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டது.

உடனே வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த செய்தியை உறவினர்கள் திலகவதியிடம் தயங்கியபடியே கூறியுள்ளனர். இதைக் கேட்ட திலகவதி, "10 மாதம்சுமந்து பெற்ற குழந்தையின் சாவுக்கு நானே காரணம் ஆகி விட்டேனே" என்று கதறி அழுதார். இந்தஅதிர்ச்சியிலேயே அவரது உயிரும் பிரிந்து விட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+