வெள்ள நிவாரண வழக்கு: பன்னீருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்குப்பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள்வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வெள்ள நிவாரணம் அளிக்கக் கோருவது தொடர்பாக, தமிழக வழக்கறிஞர்கள் சங்கமான "பார்"கவுன்சிலின் தலைவர் வழக்கறிஞர் கருப்பன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ.20,000 வெள்ளநிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கருப்பன் அம்மனுவில்கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பக்தவத்சலம் ஆகியோர் அம்மனுவை இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
வழக்கறிஞர் கருப்பனின் இந்த மனுவுக்குப் பதில் மனு ஒன்றைத் தமிழக அரசு அடுத்த ஒரு வாரத்திற்குள் தாக்கல்செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்த நோட்டீஸ் ஒன்று பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications