புதுவையில் 23 பஸ்கள் சிறைபிடிப்பு: கட்டண உயர்வு எதிரொலி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 23 பஸ்களை பொதுமக்கள்சிறைபிடித்தனர்.
நிதி நெருக்கடி காரணமாக சமீபத்தில் தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் உள்பட பல கட்டணங்களும்விலைவாசிகளும் உயர்த்தப்பட்டன.
அதேபோல் பாண்டிச்சேரியிலும் 2 நாட்களுக்கு முன் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தக் கட்டண உயர்வுக்குப் பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் நேற்று (திங்கள்கிழமை) 15பஸ்களை சிறைபிடித்தனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் போலீசாரும் வந்து பேசி, சமாதானப்படுத்திய பிறகு அந்த 15 பஸ்களையும்பொதுமக்கள் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில பகுதிகளில் 8 பஸ்களைப் பொதுமக்கள் சிறைபிடித்துவைத்துள்ளனர். இதையடுத்து பாண்டிச்சேரியின் பல பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி பாண்டிச்சேரி அரசுபோக்குவரத்துக்கழகத்தின் முன்பாக ஏராளமான அதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications