கருணாநிதி பிரச்சாரத்தால் மாற்றம் ஏதுமில்லை: உளவுத் துறை சர்வே
ஆண்டிப்பட்டி:
கடந்த 16ம் தேதி கருணாநிதி மேற்கொண்ட பிரச்சாரத்தால் ஆண்டிப்பட்டி தொகுதியில் பெரிய அளவில் மாற்றம்ஏதும் நிகழவில்லை என்று உளவுத் துறை நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளரான வைகை சேகருக்கு ஆதரவு கோரி சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின்,மு.க. அழகிரி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
உச்சக்கட்டமாக கடந்த 16ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம்மேற்கொண்டார்.
அவருடைய பிரச்சாரத்தின்போது சில பகுதிகளில் கூட்டம் அதிமாகக் காணப்பட்டது. இதனால் திமுகவுக்குப் பலம்கூடிவிட்டதோ என்பதைக் கண்டறிய உளவுத் துறை முடுக்கிவிடப்பட்டது.
உளவுத் துறையும் மின்னல் வேகத்தில் ஒரு சர்வேயை நடத்தியது. கருணாநிதியின் பிரச்சாரத்தின்போது என்னென்னவிஷயங்களெல்லாம் வாக்காளர்களைச் சென்றடைந்தன, வாக்காளர்கள் மத்தியில் எவ்வளவு மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த சர்வே மூலம் சேகரிக்கப்பட்டன.
பின்னர் உளவுத் துறையின் சர்வே அறிக்கை அரசு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருணாநிதியின் பிரச்சாரத்தால் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றே சர்வே அறிக்கைகூறியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications