ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக வெற்றி உறுதி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளரானவைகை சேகர் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவார் என்று அக்கட்சித் தலைவரான கருணாநிதி இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.

சென்னையில் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சர் பதவியை இழந்தாலும் இன்னும் முதல்வருக்குரிய தோரணையில்தான் ஜெயலலிதா பவனி வருகிறார்.

ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே நினைக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவர்சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எந்த வேலையையும் செய்யும்படி ஏவக் கூடாது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்மையான ஜனநாயக முறைப்படி அநியாயமாக இல்லாமல் தேர்தல் நடந்தால்வைகை சேகர் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவார் என்று கருணாநிதி கூறினார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக பிரச்சாரம் செய்வதாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, தேர்தல் கமிஷன் மீது நாங்களும் மக்களும் வைத்துள்ள நம்பகத் தன்மையைக்காத்துக் கொள்ள வேண்டியது அதன் பொறுப்பு என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+