ஓட்டுகளை காப்பாற்றிக் கொள்ள ஓடி வரும் வாக்காளர்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் மிக பரபரப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தாமதமாக வந்தால் தங்கள் ஓட்டுகளை வேறு யாராவது போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவேபெரும்பாலனவர்கள் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அடையாள அட்டைகளையும் மீறி கள்ள ஓட்டுப் போட முக்கிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அனைத்துமுயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து வருவதால் இதுவரை கள்ள ஓட்டுபோடுவது இதுவரை தடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத்தில் அடங்கிய மேலமங்கலம் என்ற இடத்தில்காலை 9.45 மணிக்குள்ளேயே 12 சதவீத வாக்குள் பதிவாகிவிட்டன.
திம்மநாயக்கன் பட்டி, வடுகப்பட்டி ஆகிய இடங்களிலும் சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.