காஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை?
லண்டன்:
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனைத் தீவிரமாகதேடி வருவதாக பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மீது அல்-கொய்தா அமைப்பினர் விமானங்கள் கொண்டு தாக்கியதற்கு முக்கிய காரணமான பின்லேடனைத் தேடி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வேட்டையாடின. ஆனால்பின்லேடனை பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டான் என்றும் காஷ்மீரில் ஒளிந்துள்ளான் என்றும்அல்லது இறந்திருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படையினரும் பிரிட்டனின் விமானப்படை வீரர்களும் இணைந்த40 பேர் கொண்ட குழு ஒன்று, காஷ்மீரில் பின் லேடனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ்நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.
அதிநவீன கருவிகளைக் கொண்டு அவர்கள் பின்லேடனைத் தேடி வருவதாகவும், உளவு செயற்கை கோளின்உதவியுடன் அல்-கொய்தாவினரைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துஉள்ளது.
பின் லேடன் காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் ஒளிந்திருப்பதாகவும், அவனை ஹர்கத்-உல்-முஜாஹிதீன்அமைப்பை சேர்ந்த கொரில்லாக்கள் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறைக்கு இந்திய உளவுத்துறைகடந்த மாதம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
அதன் அடிப்படையிலேயே அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மறுப்பு:
ஆனால் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் பின் லேடனைத் தேடிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைஇந்தியா மறுத்துள்ளது.
எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அந்தப் பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்றுஇன்று (சனிக்கிழமை) கூறிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், எந்தக் காரணத்தைக் கொண்டும்அமெரிக்க, பிரிட்டிஷ் உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான கேள்விக்கேஇடமில்லை என்று கூறினார்.
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குஅந்தச் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications