For Daily Alerts
Just In
கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தமா? - அரசு விளக்கம்
சென்னை:
கிராமப் பூசாரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரையிலான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற புகாரை தமிழகஅரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் கிராமப் பூசாரிகளுக்குஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற தகவல் தவறானது.
சில சரகங்களில் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரத்துசெய்யப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்திற்குரிய ஓய்வூதியத் தொகையைப் பெறாத கிராமப் பூசாரிகள்சம்பந்தப்பட்ட சரக இந்து சமய அறநலையத்துறை உதவி ஆணையரை அணுகினால் உடனடியாகஅவர்களுக்குரிய ஓய்வூதியம் வழங்கப்படும்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, February 23, 2002, 5:30 [IST]