அயோத்தி: நிலத்தைக் கேட்டு வி.எச்.பி. மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை மத்திய அரசு ஒப்படைக்கவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மிரட்டியுள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கால் "அஜ் தக்" என்ற பத்திரிக்கைக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:

பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால், பிரச்சனைக்கு உட்படாத நிலத்தை ராமஜென்ம பூமியிடம்ஒப்படைப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

மத்தலைவர்களை பகைத்துக் கொண்டு இந்த அரசு ஆட்சியில் நீடிக்க முடியாது.மார்ச் 15ல் திட்டமிட்டபடி கோவில்கட்டப்படும் என்று அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம் கோரும் சோனியா:

அயோத்தி பிரச்சனையை தீர்க்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ்தலைவி சோனியாகாந்தி, பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சோனியா கூறியுள்ளதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை கட்டப் போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத்அறிவித்துள்ளது. இதனால், நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இப்பிரச்சனை குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இப்பிரச்சனையை தீர்க்கஅனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தாங்கள் விவாதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் சோனியாகுறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+