ஆட்டோவில் வந்து விழுந்து வெடித்த காஸ் சிலிண்டர்: புதுமாப்பிள்ளை சாவு
சென்னை:
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில்சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவர் பலியானார்.
திங்கள்கிழமை அதிகாலை இந்த நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச்சிதறின. பல சிலிண்டர்கள் ரோட்டில் வந்து விழுந்து வெடித்தன.
அப்போது அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவுக்குள்ளும் ஒரு சிலிண்டர் வந்து விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில்இருந்த குணசேகரன் என்பவர் அந்த இடத்திலேயே பலியானார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை வடசென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு நேரில் வந்து பார்வையிட்டார்.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications