For Daily Alerts
Just In
துறையூர் அருகே 20,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மருவத்தூரில் போலீசார் 20,000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
துறையூர் அருகே மருவத்தூரில் உள்ள குண்டூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல்வந்தது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கே சிலர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அங்கு 98 பேரல்களில் 20,000 லிட்டருக்கு மேல் சாராயம் இருந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 லட்சம். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் தலைமறைவாகியுள்ளனர்.இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Story first published: Monday, February 25, 2002, 5:30 [IST]