நாங்க சொன்னா கேக்கணும்: ஜெயாவுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
எதிர்க்கட்சிகளை உடைப்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவுக்கு பாமகநிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வெற்றியடைந்தது குறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,
தமிழகத்தை நாட்டின் முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தை முதன்மையானமாநிலமாக மாற்றுவதற்கு ஜெயலலிதா நினைத்தால், முதலில் எதிர்க்கட்சிகளை உடைப்பதை நிறுத்த வேண்டும்.அதே போல் எதிர்க்கட்சிகள் கூறும் அறிவுரைகளையும் ஜெயலலிதா ஏற்று நடக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளை உடைக்க ஜெயலலிதா அரசு அதிகாரிகளை பயன்படுத்துகிறார். சமீபத்தில் கூட பாமக மாநிலநிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சேரப் போவதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு அரசு அதிகாரிகளை புரோக்கர்களாக பயன்படுத்தினால், எப்படி அவர்தமிழகத்தை முன்னேற்றுவார். அரசு அதிகாரிகளை அரசியல் விவாகரங்களுக்கு பயன்படுத்துவதை ஜெயலலிதாநிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால், மலிவு விலை சாராயத்தையும் ரத்து செய்யவேண்டும். பொது மக்கள் கூட மலிவு விலை சாராயத்தை வெறுக்கிறார்கள். ஆகவே அதை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications