கரூர் அருகே வேன்-லாரி மோதல்: 3 பெண்கள் உள்பட 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பராமத்தி:
பராமத்தி அருகே வேனும் லாரியும் இன்று (புதன்கிழமை) காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பெண்கள்உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் பராமத்தி அருகே கரூரிலிருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு கொடுமுடி நோக்கி ஒரு டெம்போவேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர் திசையில் ஒரு லாரி பயங்கர வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அந்த வேனும் லாரியும் நேருக்கு நேராக பயங்கரச் சத்தத்துடன் மோதிக் கொண்டன.
இதில் வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் 3பெண்களும் அடக்கம்.
இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிவருகின்றனர். இவர்களும் வேனில் பயணம் செய்தவர்கள்தான்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications