For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கன் பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆப்கானிஸ்தான் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ஹமீத் கர்சாய்க்குநேற்று (செவ்வாய்க்கிழமை) சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே பல ஆப்காகானிஸ்தான் அமைச்சர்கள் வந்துபோன நிலையில், தற்போது ஹமீத் கர்சாயும் வந்துள்ளார்.அவருடன் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும் வந்துள்ளார்.

பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர்உள்பட பல அமைச்சர்களும் டெல்லி விமான நிலையத்தில் கர்சாய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்து சிறப்பானவரவேற்பு அளித்தனர்.

பின்னர் இந்தியத் தொழில்துறை சம்மேளனம் நடத்திய ஒரு கூட்டத்தில் நேற்றிரவு கர்சாய் கலந்து கொண்டார்.அப்போது, ஆப்கானிஸ்தானில் தொழில் தொடங்க இந்தியத் தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் முழு அமைதி திரும்பி விட்டதாலும் அங்கு தொழில் தொடங்கினால் நிறைய லாபம்அடையலாம் என்பதாலும் இந்தியத் தொழில் நிறுவனங்கள் அங்கு தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும்கர்சாய் கூறினார்.

பின்னர் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதுகுறித்தும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் கர்சாய் 35 நிமிடங்கள் பேசினார்.

ஆப்கானுக்கு இந்தியா ரூ.50 கோடி உதவி:

இதற்கிடையே ஆப்கானிஸ்தானுக்கு ரூ.50 கோடி உடனடி உதவித் தொகையாக வழங்கப்படும என்று இந்தியாஇன்று அறிவித்தது.

கர்சாயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய வாஜ்பாய், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X