இலங்கை பிரச்சனை: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்டுள்ள நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்கா ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, இவ்விஷயத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நார்வே தூதுக்குழு மேற்கொண்ட முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிரந்தரபோர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் இலங்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதுஎன்றும் அதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிரந்தரப் போர்நிறுத்தத்தில் விடுதலைப்புலிகள் கையெழுத்திட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அரசியல் விரோதம் காரணமாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சந்திரிகா முயல்கிறார். இந்த ஒப்பந்தத்தால்இலங்கையில் அமைதி ஏற்படும் என்று நினைத்திருந்தவர்கள் தற்போது கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.
இந்தியர்களும் மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டால்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும்.இதுகுறித்து சோனியா காந்தியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இது குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளேன் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications