குஜராத்தில் பயங்கர வன்முறை: 20 பேர் பலி
அகமதாபாத்:
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (புதன்கிழமை) தாக்கப்பட்டு 58 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டசம்பவத்தையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் இன்று பயங்கர வன்முறை வெடித்ததில் 20 பேர்கொல்லப்பட்டனர்.
அயோத்தியிலிருந்து ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளை சில சமூக விரோதிகள்எரித்ததால் 58 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராமாநிலங்களில் முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்தது.
இதையடுத்து குஜராத்தில் இன்று பெரும் வன்முறை வெடித்தது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் பரோடாநகரின் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. இதில் 3 பேர் குத்திக் கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் கலவரக் கும்பலைபோலீசார் கலைத்தனர். இதற்கிடையே இங்கு ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மற்றொரு இடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர வேறு 14பேர் பல்வேறு சம்பவங்களில் வன்முறைக்குப் பலியாகினர்.
ரயில் எரிப்புச் சம்பவம் நடந்த கோத்ரா நகரிலும் இன்று 2வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது.
குஜராத் தலைமை செயலக வளாகத்தில் தீவைப்பு
இதற்கிடையே குஜராத் தலைமை செயலகத்தின் பழைய வளாகத்தில் உள்ள வக்பு போர்டு அலுவலகத்தைஅடையாளம் தெரியாத 40 பேர் கொண்ட கும்பல் இன்று காலை 11.20 மணிக்கு தீவைத்து எரித்தது.
இதில் அந்த அலுவலகத்தில் இருந்த பணம், ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் புத்தகங்கள் ஆகிய அனைத்தும்எரிந்து போயின.
ஆனால் அந்தக் கும்பல் வருவதைப் பார்த்தவுடன் இந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேறிதப்பியோடி விட்டதால் உயிர் பிழைத்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications