தங்கபாலு மீது நடவடிக்கை: சோனியாவிடம் இளங்கோவன் விளக்கம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து கட்சிமேலிடத்திடம் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விலகி தனியாக செயல்பட்டுவருகிறது. இந்த கூட்டணி பிளவிற்கு காரணம் இளங்கோவன் தான் என்று இளங்கோவனின் எதிர்கோஷ்டியினர்கூறி வருகின்றனர்.
மேலும் தற்போதைய ஆண்டிப்பட்டி தேர்தலுக்கு முன்பு பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால் தேர்தலைபுறக்கணிப்பதாக இளங்கோவன் அறிவித்தார். இது கட்சிக்குள் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது.
இதனால் இளங்கோவனின் எதிர்ப்பாளர்கள் ஆளுக்கு ஆள் கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.இளங்கோவனை கண்டிப்பதுடன், அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்கபாலு கடைசியாக அறிக்கைவெளியிட்டார்.
இதையடுத்து தங்கபாலு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி அவர் மீது கட்சி மேலிடம்நடவடிக்கை எடுக்கும் என்று இளங்கோவன் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி தலைமை தங்கபாலுவிடம் விளக்கம் கேட்டது. தங்கபாலு அளித்த விளக்கத்தைதொடர்ந்து, டெல்லி சென்ற இளங்கோவனிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டது. அவரும் கட்சி மேலிடத்தில்விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications