கோவை கம்ப்யூட்டர் நிறுவன மோசடி: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களின் ரூ.16 கோடி பணத்தை மோசடிசெய்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஏ.டி.எம். என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் டெட்டா என்ட்ரி வேலை வாய்ப்பை அளிப்பதாகக்கூறி ரூ.16 கோடி அளவுக்கு மோசடி செய்தது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த இந்நிறுவனத்தின் அதிபர் அருண் சின்னச்சாமி என்பவர் கடந்த 17ம் தேதிகைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சின்னச்சாமிக்கு பல்வேறு போலியான பெயர்களின் வங்கிக் கணக்குகளை ஏற்படுத்திக் கொடுத்த ஒருகூட்டுறவு வங்கியின் மானேஜர் ராமசாமியை இன்று (வியாழக்கிழமை) போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்தக் கம்ப்யூட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரையும் நேற்றிரவு போலீசார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications