ராஜ்ய சபா தேர்தல்: 4 அதிமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு
சென்னை:
ராஜ்ய சபாவுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இவற்றில் அதிமுக 4 இடங்கள் வரை ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது.
ராஜ்ய சபா அதிமுக எம்.பிக்கள் நிறைகுளத்தான், சவுந்தரராஜன், திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, சுப்பையன்மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன்முடிவடைகிறது.
மேலும், மாநில அமைச்சராகி விட்டதால் தனது பதவியை தளவாய் சுந்தரம் ராஜினாமா செய்துள்ளதால் அந்தஇடம் காலியாக உள்ளது. இதையடுத்து 6 காலியிடங்களுக்கும் மார்ச் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு ராஜ்யசபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின்ஆதரவு தேவை.எனவே காலியாக உள்ள 6 இடங்களில் 4 இடங்கள் வரை அதிமுக வேட்பாளர்கள் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் ஒரு இடத்தில் பாரதீய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் திமுகபோட்டியிட்டு வெல்லலாம்.
6-வது இடத்தில் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்று தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனை அந்த இடத்தில் போட்டியிட வைக்க தமாகா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமாகாவுக்கு சட்டசபையில் 23 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இந்திய கம்யூனிஸ்ட் (5), மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் (6) ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவை. இந்தக் கட்சிகள் தமாகாவுக்கு ஆதரவு அளிக்கும் என்றுதெரிகிறது.
ராஜ்யசபா எம்.பி. ஆவதன் மூலம் டெல்லியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள ஜி.கே.வாசன்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.