Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நக்கீரன் நிருபர் குடும்பத்தினரிடம் போலீஸ் அத்துமீறல்: கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்தினரிடம் போலீசார் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு திமுகதலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவசுப்பிரமணியத்தின் வீட்டைச் சோதனை போடுகிறோம் என்ற பெயரில் அவருடைய மனைவி மற்றும்குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்தியதாக தமிழகப் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குத் தகவல் சேகரிப்பதற்காகச் சென்ற தினகரன் மற்றும் தினமலர் நிருபர்கள்மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவற்றைக் கண்டித்து சென்னையில் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்கூறியுள்ளதாவது:

நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் நடந்து கொண்ட விதம்,மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.

அவ்வாறு நடந்து கொண்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மேலும் தினகரன் மற்றும் தினமலர் ஆகிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது, பத்திரிக்கைசுதந்திரத்திற்கு எதிரானதாக உள்ளது.

தமிழக போலீசாரின் இந்தச் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கருணாநிதி அவ்வறிக்கையில்கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+