குஜராத் வன்முறை: தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு
சென்னை:
குஜராத்தில் தற்போது பெரும் வன்முறை நடந்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்தபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளைகுஜராத் மாநிலம் கோத்ரா நகர் ரயில் நிலையத்தில் சில சமூக விரோதிகள் எரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரிந்து போயினர். இதையடுத்து குஜராத்தின் பெரும்பாலான நகரங்களில்வன்முறை வெடித்துள்ளது. அகமதாபாத், பரோடா, காந்திநகர் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டம் நிறைந்ததாக கருதப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறுமத்திய உள்துறை செயலகம் உத்தரவிட்டிருந்தது. இதன் படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறை தலைவர் நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படும் இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூடுதல்போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில்கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து வண்டிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் ரயில்வேபோலீசார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனைசெய்யப்படுவார்கள்.
மேலும் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் போலீசார் கூடுதலாக பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர் என்று நெய்வால் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications