குஜராத் வன்முறை: தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு
சென்னை:
குஜராத்தில் தற்போது பெரும் வன்முறை நடந்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்தபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளைகுஜராத் மாநிலம் கோத்ரா நகர் ரயில் நிலையத்தில் சில சமூக விரோதிகள் எரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரிந்து போயினர். இதையடுத்து குஜராத்தின் பெரும்பாலான நகரங்களில்வன்முறை வெடித்துள்ளது. அகமதாபாத், பரோடா, காந்திநகர் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டம் நிறைந்ததாக கருதப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறுமத்திய உள்துறை செயலகம் உத்தரவிட்டிருந்தது. இதன் படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறை தலைவர் நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படும் இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூடுதல்போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில்கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து வண்டிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் ரயில்வேபோலீசார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனைசெய்யப்படுவார்கள்.
மேலும் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் போலீசார் கூடுதலாக பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர் என்று நெய்வால் கூறினார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கோவை மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம் – நாளை முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை -
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications