கொலை வழக்கில் கான்ஸ்டபிளுக்கு தூக்குத் தண்டனை
மதுரை:
ஒரே குடும்பத்தின் 3 பேரைக் கொலை வழக்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு தூக்குத்தண்டனை விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்ட ஆயுதப் படையில் காவலராக இருந்தவர் செளந்தரபாண்டியன். இவருக்கு ராஜபாண்டி மற்றும்மொக்கசாமி என்ற 2 சகோதரர்கள் உள்ளனர்.
செளந்தரபாண்டிக்கும் ராஜபாண்டிக்கும் திருமணம் ஆகி விட்டது. நிலத் தகராறு காரணமாக அடிக்கடி இவர்கள் 2பேருக்கும் இடையே தகராறு நடப்பது வழக்கமாக இருந்தது.
இந்தச் சண்டை காரணமாக செளந்தரபாண்டி மனைவி முருகேசுவரி மற்றும் ராஜபாண்டி மனைவி அமுதாராணிஆகியோரும் அடிக்கடி வாய்ச் சண்டையில் ஈடுபடுவது வழக்கம். பல சமயங்களில் இது கைகலப்பிலும் போய்முடியும்.
அடிக்கடி நடக்கும் இந்தச் சண்டையால் கோபமுற்ற செளந்தரபாண்டி, கடந்த 2000மாவது ஆண்டு ஜூலை மாதம்14ம் தேதி காலை பணிக்குச் சென்று, ஆயுதப் படை கிட்டங்கியிலிருந்து பிஸ்டல் ஒன்றையும் 10 புல்லட்களையும்எடுத்துக் கொண்டு ராஜபாண்டி வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக் கதவை அவர் தட்டியபோது, ராஜபாண்டி வந்து கதவத்ை திறந்தார். அவரை செளந்தரபாண்டி நேருக்கு நேர்சுட்டார். அதில் சுருண்டு விழுந்து ராஜபாண்டி அங்கேயே இறந்தார்.
சப்தம் கேட்டு ஓடி வந்த அமுதாராணியையும் செளந்தரபாண்டி ஆக்ரோஷத்துடன் சுட்டார். அவரும் அங்கேயேஇறந்தார். அவர்களது இளைய மகன் கார்த்திகேயனும் செளந்தரபாண்டியன் வெறிக்குப் பலியானான். மூத்த மகன்விஜயக்குமார் மட்டும் குண்டுக் காயங்களுடன் உயிர் தப்பினான்.
இந்தப் பயங்கர கொலைகள் தொடர்பாக போலீசார் செளந்தரபாண்டியைக் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரைமாவட்டம் இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தற்போது தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி பொன்னுச்சாமி தனது தீர்ப்பில், படித்திருந்தும் காவல்துறை என்ற பொறுப்பான பதவியில் இருந்தும் கூடமிருகத்தனமாக இந்த கொலைகளைச் செய்துள்ளார் குற்றவாளி. எனவே அவருக்கு அதிகபட்ச தண்டனையானதூக்குத் தண்டனையை விதித்து சாகும்வரை அவரைத் தூக்கிலிடுமாறு உத்தரவிடுகிறேன் என்று கூறியிருந்தார்.