For Quick Alerts
For Daily Alerts
Just In
"அமைதி ஒப்பந்தத்தை சந்திரிகா எதிர்க்கவில்லை"
சென்னை:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீருவது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எடுத்து வரும் முயற்சிகளுக்குஅதிபர் சந்திரிகா முழு ஆதரவு அளிப்பதாக அவரது ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எடுத்து வரும் அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திராக முழு ஆதரவுதெரிவித்துள்ளார். அமைதி உடன்பாட்டை அவர் எதிர்ப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.
விக்கிரமசிங்கேவுக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதிஒப்பந்தத்தில் சில தவறுகள் இருப்பதாக அதிபர் உணர்ந்துள்ளார்.
இவற்றை ஆராய்வதற்காக அவர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழு ஒப்பந்தத்தை ஆராய்ந்து அதுகுறித்துஅதிபருக்குத் தெரிவிக்கும்.
இதுதொடர்பாக விக்கிரமசிங்கேவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார் என்றார் கதிர்காமர்.
Comments
Story first published: Friday, March 1, 2002, 5:30 [IST]