For Daily Alerts
Just In
குஜராத்தில் கர சேவகர்கள் எரிப்பு: ராம கோபாலன் கடும் கண்டனம்
குடியாத்தம்:
குஜராத்தில் ரயிலில் வந்த அயோத்தி கர சேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்ட செயலை இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலன் கண்டித்துள்ளார்.
குடியாத்தத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் அயோத்தி ராம ஜென்மபூமி பக்தர்கள் மீது கொலை வெறித் தாக்குதலைஏவி விட்டுள்ளனர். ஆனால் எந்த விலை கொடுத்தாலாவது ராமர் கோவிலை மீண்டும் அயோத்தியில் கட்டுவோம்.
ஒரு கோவில் கட்டுவதற்காக உலகிலேயே எந்த ஒரு மதமும் இப்படிக் கஷ்டப்பட்டதில்லை. இவ்வளவுகடுமையான விலையைக் கொடுத்ததில்லை.
தீவிரவாதத்தை அடக்க இந்தியா கடுமையாக நடந்து கொண்டாக வேண்டும். அதற்கு இஸ்ரேலையே உதாரணமாகஎடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ராம கோபாலன்.
Comments
Story first published: Friday, March 1, 2002, 5:30 [IST]