இந்தியாவில் வன்முறை: அமெரிக்கா, கனடா கவலை
வாஷிங்டன்:
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மதக் கலவரங்கள் குறித்து அமெரிக்காவும் கனடாவும் பெரும் கவலை தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பில் ரீக்கர் கூறுகையில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவருவது கவலையளிக்கிறது. இந்தக் கொலைகள் தொடர்பாக அமெரிக்க அரசின் சார்பில் இந்திய அரசுக்கு எங்கள்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மத வன்முறையின் எதிரொலியாக பாகிஸ்தானிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சனையை இரு நாடுகளும் ஒடுக்குவார்கள் என நம்புகிறோம் என்றார்.
கனடா...
இந்தியாவில் நடந்து வரும் வன்முறைகள் கவலையளிப்பதாக கனடா கூறியுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும். மத மோதலை இந்தியா உடனே தடுத்து நிறுத்தவேண்டும். இந்திய அரசால் இதை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும் என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்பில் கிரஹாம் கூறினார்.