ஒப்பந்தத்தை ரத்து செய்ய சந்திரிகா சதி: புலிகள் புகார்
கொழும்பு:
நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா சதி செய்வதாக விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளதால்,தான் அதை ரத்து செய்யப்போவதாக சந்திரிகா அறிவித்தார்.
இதுகுறித்து பாலசிங்கம் தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அதிபரும் அவருடைய வெளியுறவு விவகார ஆலோசகரும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்குரகசியமாக சதி செய்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பகுதிகள் இலங்கை இறையாண்மைக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் இருப்பதாகஅதிபர் கூறியிருப்பது உண்மையல்ல.
இரு தரப்பினரின் ஆக்கிரமிப்பு பகுதிகள் மற்றும் எல்லைகளை ஆய்வு செய்து, இரு தரப்பினரின் சம்மதத்திற்குபிறகே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இரு தரப்பினரும் போரில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் தயாராகியுள்ளது.மேலும் இதைக் கண்காணிக்க பல்வேறு நாடுகளிலுமிருந்து பார்வையாளர்களும் இலங்கை வந்துள்ளனர்.
விரைவில் இரு தரப்பினரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான ஆயத்த வேலைகளில் இலங்கை அரசுஈடுபட வேண்டும் என்று பாலசிங்கம் கூறினார்.












Click it and Unblock the Notifications