நெல்லையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்த இருந்த ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்ததால் ஊர்வலம்கை விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க அணிவகுப்பு நடைபெற்றது. இந்தஅணிவகுப்புக்கு பிறகு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவித்தது.
ஆனால் குஜராத்தில் பெரும் வன்முறை நடந்து கொண்டிருப்பதால், ஊர்வலம் நடந்தால் கலவரம் நடக்க வாய்ப்புஇருப்பதாகக் கருதிய போலீசார் ஊர்வலத்தைத் தடுக்க முடிவு செய்தனர்.
இதனால் அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் கை விடுமாறு போலீசார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து ஊர்வலத்தையும் பொதுக் கூட்டத்தையும் கை விடுவதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications