குஜராத் வன்முறை: ஊட்டி, குன்னூரில் கடையடைப்பு
நீலகிரி:
குஜராத்தில் ராம பக்தர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும்குன்னூரில் இன்று கடையடைப்பு நடந்தது.
விஸ்வ இந்து பஷத் அமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக ஊட்டி மற்றும் குன்னூர் ஆகியநகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் குறைந்த அளவில் ஓடின.
சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இருப்பினும் பொதுமக்களின் மாமுல் வாழ்க்கைபாதிக்கப்படவில்லை.
பா.ஜ.க.வுக்கு வீரமணி கோரிக்கை
குஜராத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வகுப்புக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர பாஜக அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வகுப்புக் கலவரங்களை தடுத்து நிறுத்த பாரதீய ஜனதாக் கட்சி அரசு கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்போது முக்கியமல்ல. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றஎண்ணமே இப்போதைக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications