குஜராத்: மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்
டெல்லி:
குஜராத்தில் நடந்து வரும் வன்முறையையும் படுகொலைகளையும் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குஜராத் கலவரம், மற்றும் அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று (திங்கள்கிழமை) அனைத்துஎதிர்கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் அலுவகத்தில் சோனியா காந்தி கூட்டினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சோம்நாத் சட்டர்ஜி,ரூப்சந்த் பால், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், ராம்ஜீ லால் சுமன், பனட்வாலா, பல்வந்த் சிங்உட்பட பல எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத்தில் நடக்கும் படுகொலைகளை நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்குகுறிப்பாக சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கலவரம் அதிகமாக நடக்க உள்ள பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பி கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்குஎதிர்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் குஜராத்தில் நடக்கும் கலவரத்தின் நிலவரம் குறித்து கண்டறிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குழுஅமைக்கப் போவதாகவும், குஜராத் அரசு கலவரத்தை அடக்க சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்துடெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பியில் கவர்னர் ஆட்சியா?
இதற்கிடையில்உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி ஏற்படுத்துவதற்காக தான், குஜராத்தில் மத்திய அரசுவன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் முலாயம் சிங் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் தனி பெரும் கட்சியாக சமாஜ்வாடி உள்ளது. எங்களை ஆட்சி அமைக்க விடாமல் கவர்னர்ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசு குஜராத்தில் கலவரத்தை தூண்டியுள்ளது. இந்தக் கலவரத்தைஅயோத்தியிலும் பரப்பி அதன்மூலம் உத்தரபி பிரசேத்தில் கவர்னர் ஆட்சி கொண்டு வர பா.ஜ.க. முயல்கிறது.
உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்காக ரகசிய சதி வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ்வாடி கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் உ.பி.யில் ஆட்சியை அமைப்போம் என பாஜககூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் முலாயம் சிங்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications