தமிழர் பிரச்சினை தீர சந்திரிகா விரும்பவில்லை .. நெடுமாறன் பாய்ச்சல்
மதுரை:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற உண்மையான எண்ணம் அதிபர் சந்திரிகாவுக்கு இல்லை.இதனால்தான் அமைதி உடன்பாட்டை குலைக்க அவர் முயல்கிறார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் சந்திரிகாவுக்கு உண்மையிலேயே ஆர்வம் இல்லை. பிரச்சினை தீரக் கூடாதுஎன்றுதான் அவர் விரும்புகிறார். இதனால்தான் அமைதி உடன்பாட்டை குலைக்க முயற்சிக்கிறார்.
இந்த அமைதி உடன்பாட்டுக்கான முயற்சிகளை அவர்தான் முதலில் துவக்கினார். இப்போது அவரே சீர் குலைக்க முயல்வதுவேடிக்கையாக உள்ளது.
இலங்கையில் அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் இடையே எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. எனவே பிரதமர் ரணில்விக்கிரசிங்கேவின் முயற்சிகளுக்கு சந்திரிகா முட்டுக் கட்டை போட நினைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இலங்கை அதிபரின் முட்டுக்கட்டை முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தியப்பிரதமர் வாஜ்பாய் உடனடியாக இதில் தலையிட்டு சந்திரிகாவின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications