For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிக் ஏறலையே ஏண்டா?: 2 பேர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

குளித்தலை அருகே மதுக்குடித்தும் கிக் ஏறாததால் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை தாக்கப்பட்டது. இதில் இருவர்கொலை செய்யப்பட்டனர்.

குளித்தலை அருகே உளள பெரியபனையூரை சேர்ந்தவர்கள் மணிமுத்து (28), செந்தில்குமார் (29), தர்மலிங்கம்(29), சக்திவேல் (26), இன்னொரு சக்திவேல் (27). இவர்கள் அனைவரும் உறவினர்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு நெய்தலூர் காலனியில் உள்ள சரவணா ஒயின்ஸில் அனைவரும்கூட்டாக மது அருந்த சென்றனர். மது அருந்தியும் கிக் ஏறாததால் மதுக்கடை ஊழியர்களிடம் 5 பேரும் தகராறுசெய்தனர்.

மேலும் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் கடை ஊழியர்கள் மனோகரன்,பெரியசாமி, மோகன்தாஸ் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றி கைகலப்பாகியதால் கடை ஊழியர் பெரியசாமி கத்தியால் தாக்க துவங்கினார். இதில்,தர்மலிங்கம், சக்திவேல், இன்னொரு சக்திவேல் ஆகியோருக்கு குத்து விழுந்தது. இவர்களின் உறவினர்களானமணிமுத்துவும், செந்தில்குமாரும் ஓடி விட்டதால் அவர்கள் தப்பினர்.

அப்போது கடையின் பங்குதாரரின் உறவினர் தங்கவேல் அன்றைய வசூல் கணக்கு பார்க்க வந்தார். இந்தசண்டையை தடுக்க முயன்ற அவர் மீதும் பெரியசாமி கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த தர்மலிங்கம், 2 சக்திவேல்கள், தங்கவேலு ஆகியோரை திருச்சி தனியார் மருத்துவமனையில்சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே தர்மலிங்கம் இறந்தார்.தங்கவேல் மருத்துவமனையில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட மதுக் கடை ஊழியர்களை தேடிவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X