அமைதி முயற்சி: ரணிலுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு
கொழும்பு:
இல்லங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட அதிபர்சந்திரிகா குமாராதுங்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதன்படி சமீபத்தில் விடுதலைப்புலிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடைவிலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நார்வே தூதுக்குழுவின் உதவியுடன் இரு தரப்பினரிடையேயும் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் இலங்கையின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும்குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அதை ரத்து செய்யப்போவதாகவும் சந்திரிகா கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சந்திரிகாவின் செய்திதொடர்பாளர் ஹரிம் பெரிஸ் கூறியதாவது:
இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமருடன் சேர்ந்து அதிபரும் முயற்சி செய்யப் போகிறார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை வேண்டுமென்றே அதிபர் சந்திரிகா எதிர்க்கிறார் என்பது தவறான கருத்து. ஒப்பந்தம்குறித்து அவருடைய கருத்தை கூறுவதிலும், ஆலோசனை வழங்குவதிலும் எந்த ஒரு தவறும் இல்லை என்றார்பெரிஸ்.
சிவராத்திரி: ராணுவப்பாதுகாப்பு தளர்வு
இந் நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு யாழ்பாணத்துக்கு சென்று வர இருந்த கட்டுப்பாடுகளை ராணுவம்தளர்த்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட உடனேயே விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பொருளாதாரதடை நீக்கப்பட்டு உணவு பொருட்கள் சகஜமாக எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவராத்திரி பண்டிகை செவ்வாய்க்கிழமை வருகிறது. இதை முன்னிட்டு யாழ்பாணம் மற்றும் தமிழர்பகுதிகளுக்குச் செல்ல இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
யாழ்பாணத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு எந்த தடையும் இல்லாமல் சென்று வரும் வகையில் இந்தகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.