மதுரை போலீஸ் கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனரான லல்லாம் சங்கா திடீரென்று டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
சங்காவுக்குப் பதிலாக என்.வி.என். சூர்ய பிரசாத் தற்போது மதுரை போலீஸ் கமிஷனராக தமிழக அரசால்நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் துணை கமிஷனராக சூர்ய பிரசாத் பணியாற்றி வருகிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சங்கா எதற்காக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.அவருக்கு மாற்றுப் பணி என்ன என்பது குறித்தும் அதில் கூறப்படவில்லை.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசாரைத் தாக்கி 2 அல்-உம்மா கைதிகளைக்கடத்திக் கொண்டு சென்ற மர்ம நபர்கள் மதுரையில்தான் ஒளிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அல்-உம்மா கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மர்ம நபர்கள் சுட்டதால் துப்பாக்கிக் குண்டுக் காயம் பட்ட கேசவன் மட்டும் சஸ்பெண்டிலிருந்து தப்பி விட்டார்.
மதுரையில் தப்பிய கைதிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவு
மதுரை: சினிமா ஸ்டைலில் போலீசாரை தாக்கி 2 அல்-உம்மா கைதிகள் கடத்தல்












Click it and Unblock the Notifications