இந்தியா மீது அமெரிக்கா திடீர் பாசம்
வாஷிங்டன்:
இந்தியாவுக்குள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரபிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாகவே கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதுவரை பாகிஸ்தானை பாராட்டி வந்த அமெரிக்காவின் நிலையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. படைகளைவாபஸ் வாங்குமாறு இந்தியாவிடம் வற்புறுத்தி வந்த புஷ்சுக்கு இந்தியா கடந்த வாரம் தெளிவான பதிலைத்தந்துவிட்டது.
இந்தியாவில் நடக்கும் மதக் கலவரத்தில் கூட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ளதாக அமெரிக்காவிடம்விளக்கிய இந்திய அதிகாரிகள், எங்களை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறுவது தான் சரியாக இருக்கும்என்று கூறிவிட்டனர்.
அதே போல பாகிஸ்தானின் செயல்களில் மாற்றம் வராதவரை எல்லையில் குவித்துளள படைகளை வாபஸ் வாங்கமாட்டோம் என புஷ்ஷிடம் இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
அதே போல அமெரிக்க நிருபர் பாகிஸ்தானில் கடத்திச் செல்லப்பட் கொல்லப்பட்டதும் அந் நாட்டின் பார்வையைமாற்றியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் அதிபரிடம் புஷ் நேரில் தொலைபேசியில் இது குறித்துப் பேசினார். தீவிரவாதிகளைஅனுப்புவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு உரிய சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்தினார்.
சர்வதேச அளவில் தீவிரவாதம் குறித்த கருத்துக்கள் மாறிவிட்டதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்று கூறியபுஷ், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை இனியும் அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது என்றுகூறியுள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியொருவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறினார்.
தீவிரவாதிகள் விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை ஏற்றுக் கொண்ட முஷாரப் நடவடிக்கை எடுப்பதாகவும்உறுதியளித்துள்ளார்.
நாங்கள் முஷாரபின் உறுதிமொழியை நம்புகிறோம். நடவடிக்கை எடுத்தால் முஷாரபுக்கு நல்லது, இதில் அவர்ஏதாவது அரசியல் விளையாட்டில் ஈடுபட்டால் அவர் பிரச்சனையில் சிக்குவார் என்றும் அந்த அதகாரி கூறினார்.
சார்க் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை பிரதமர் வாஜ்பாய் அனுப்பிவைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அந்த அதிகாரி.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications