ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்ராமமோகன் ராவ் அரசின் திட்டங்கள் அடங்கிய உரையைப் படித்தார்.
இந்த உரையை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்து, சபையை விட்டு வெளிநடப்புசெய்தன. ஆளுநர் உரைக்குப் பின் சபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் திங்கள்கிழமை மறுபடியும் சபை கூடியது. அப்போது மக்களவை சபாநாயகர் பாலயோகி உள்ளிட்டமறைந்த எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநரின் உரை மீதான விவாதம் சபையில் தொடங்குகிறது.
கருணாநிதியின் சேப்பாக்கம் தொகுதி அலுவலகம் மீதான தாக்குதலை சபையில் பெரிதுபடுத்த திமுகதிட்டமிட்டுள்ளதாகத் தெகிறது. இதுதொடர்பாக சூடான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் சபைக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கிடையே அதிமுக அரசை ஆதரிப்பது தொடர்பாக பூசல்ஏற்பட்டுள்ளது. சுமார் 15 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இதுவும் இக்கட்சிஉறுப்பினர்களிடையே பூசலைக் கிளப்பி, அது சபையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஆளுநர் உரை குறித்து அதிருப்தி தெவித்துள்ளனர். எனவே இன்று தொடங்கும்சபையில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications