ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று (புதன்கிழமை) தங்களுடையவேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வரும் 27ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து 6 ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவான தங்கத் தமிழ்செல்வன், டான்சி வழக்கில் வாதாடியவழக்கறிஞர் ஜோதி, சீ. பெருமாள் மற்றும் எஸ்.பி.எம். சையது கான் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில்போட்டியிடுகின்றனர்.
இந்த நான்கு பேரும் இன்று தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை தலைமைச்செயலகத்தில் தேர்தல் அதிகாரி ஜானகிராமனிடம் இவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அப்போது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் துரைசாமி உள்பட ஏராளமான அதிமுகஎம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும், திமுக சார்பில்போட்டியிடும் வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் கடந்த திங்கள்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், இந்த ஆறு பேரைத் தவிர இரண்டுசுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications