எங்கள் திட்டத்தை தீர்ப்பு பாதிக்காது: வி.எச்.பி.
அயோத்தி:
பூமி பூஜை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், தூண் தானம் வழங்கும் எங்கள் திட்டத்தை இந்தத்தீர்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்திலிருந்து 500 அடி தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் வரும் 15ம் தேதி இந்ததூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறிய சிங்கால், நீதிமன்றத் தீர்ப்பு இதைத் தடை செய்யமுடியாது என்றும் கூறினார்.
இந்தத் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு அனுமதித்தாலும் சரி, அனுமதிக்காவிட்டாலும் சரி. வரும்15ம் தேதி இந்நிகழ்ச்சி கட்டாயம் நடந்தே தீரும் என்றும் சிங்கால் கூறினார்.
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹம்சும் இதே கருத்தை ஏற்கனவேதெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று இரவு வி.எச்.பி. அமைப்பின்முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி:
அயோத்தியில் பூமி பூஜையை நடத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு ஆர்.எஸ்.எஸ். அதிர்ச்சிஅடைந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர்எம்.ஜி. வைத்யா கூறினார்.












Click it and Unblock the Notifications