அயோத்தியில் பூஜை நடத்த உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
அயோத்தியில் எந்தவிதமான பூஜை நடத்தவும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
1994ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் கடை பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சனைக்குஇறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணியும் நடத்தக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
அயோத்தி ராமச்சந்திரபுரத்தில் பிளாட் எண் 159 மற்றும் 160ல் உள்ள 67.73 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமானபூஜையும், சிலை தானம் வணங்கும் நிகழ்ச்சியும் நடத்தத் கூடாது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்தத் தீர்ப்புவழங்கும்வரை அங்கு எந்தப் பணியும் நடக்க விடாமல் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
சர்ச்சைக்குரிய நிலத்திலும், அரசு கையப்படுத்தியுள்ள நிலத்திலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக 1994ம் ஆண்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும இல்லை.
நாங்கள் அடுத்த தீர்ப்பு தரும் வரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து எந்தப் பகுதியையும் எக்காரணத்திற்காகவும் யாரிடமும் மத்திய அரசு தரக் கூடாது. தனது கண்காணிப்பில் தான் வைத்திருக்க வேண்டும்என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications