அவசரமாய் கூடுகிறது தே.ஜ. கூட்டணிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தியில் பூஜை நடத்த வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏன் கூறியதுஎன தெலுங்கு தேசம் கட்சி விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல திரிணமூல் காங்கிரசும் வாஜ்பாயிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதையடுத்து மாலை 6 மணிக்கு தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
அவர்களிடம் வாஜ்பாய் விளக்கம் தருவார் என்று தெரிகிறது. தே.ஜ. கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகளுக்கு 79எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும்.
தெலுங்கு தேசத்துக்கு மட்டும் 29 எம்.பிக்கள் உள்ளனர். நாயுடு நினைத்தாலே ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும்.எனவே, அவரது கோபத்தைத் தணிக்க அவசரமாய் தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தை பா.ஜ.க. கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications