கோவை குண்டு வெடிப்பு கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியிருந்த ஒரு குற்றவாளி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவுமருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோயம்புத்தூரில் கடந்த 1998ல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 50 பேருக்கும் மேல்கொல்லப்பட்டனர்.
இந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 167 பேர் கைது செய்யப்பட்டு, கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணை இன்னும் முடியாத நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது தஸ்தகீர்என்ற கைதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையடுத்து கோயம்புத்தூர் சிறையிலிருந்து முகமது தஸ்தகீரை ஒரு மருத்துவமனையில் சிறை போலீசார்சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முகமது தஸ்கீர் நேற்றிரவு உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications