போர்நிறுத்த ஒப்பந்தம்: புலிகளுக்கு இலங்கை ஆதரவு
கொழும்பு:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர்திலக் மாரப்பனே கூறினார்.
ஆனால் தாங்கள் ஒப்பந்தத்தை எந்தவிதத்திலும் மீறவில்லை என்று அமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் பதிலடிகொடுத்தனர்.
இந்நிலையில் இவ்விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.பி.பி.சி. வானொலியின் சிங்கள ஒலிபரப்பு சேவைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பேட்டி கொடுத்தமாரப்பனே கூறியதாவது:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் முறையாகத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒப்பந்தவிதிமுறைகளை அவர்கள் மீறியதாக இதுவரை எங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை.
மேலும் சிறுவர்-சிறுமிகளை தங்கள் இயக்கத்தில் விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொண்டு வருகின்றனர் என்றகுற்றச்சாட்டும் தவறானதாகும்.
ஆனால் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் விடுதலைப்புலிகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது மிகவும்வருந்தத்தக்கதாகும் என்றார் மாரப்பனே.
இந்நிலையில் புலிகள் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை மற்றொரு இலங்கை அமைச்சரான பி.சந்திரசேகரனும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இவ்விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுகிறதுஎன்றும் அவர் கூறினார்.
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் எம். சிவசிதம்பரமும் அமெரிக்காவுக் இவ்விஷயத்தில் தலையிடஉரிமையில்லை என்று கூறியுள்ளார். ஒப்பந்த விதிமுறை மீறல் உள்ளதா என்பது குறித்து நார்வே கண்காணிப்புகுழுவினர்தான் கூற வேண்டுமே தவிர அமெரிக்கா இதைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் இந்தத் திடீர் குற்றச்சாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்று சிலோன் தமிழ்காங்கிரஸ் தலைவர் ஏ. விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாங்கள் ஒப்பந்தத்தை மீறவில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளதை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் ஆஷ்லே வில்ஸ்வரவேற்று, பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications